முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி எத்த
நந்தி மாகாளர் என்பார் நடுவுடையர்கள் நிற்பச்
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே
விளக்கம்
நடுவுடையார்கள் = நந்திக்கும், மாகாளருக்கும் இடையே உள்ள காவலர்கள். யமுனை, இலக்குமி, சரஸ்வதி, கணபதி, கங்கை. இந்த ஏழு காவலர்களும், கயிலாயத்தின் மேற்கு நுழைவாயில் உள்ள காவலர்கள் என்று கூறுவார்கள். திரிபுரத்து அரக்கர்களின் கொடுமை தாங்கமுடியாத தேவர்கள் கயிலாயம் சென்று முறையிட்ட நிகழ்ச்சியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார் போலும்.
பொழிப்புரை
கயிலாய மலையில் காவலர்களாக நின்றவர்களைத் தாண்டி, உள்ளே சென்ற வானவர்கள், சிவபெருமானை முறையாக வணங்கிய பின்னர் அவரிடம் திரிபுரத்து அரக்கர்கள் செய்த கொடுமைகளை எடுத்துரைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், தன்னை வழிபடாமல் தவறான வழியில் சென்ற திரிபுரத்து அரக்கர்களை, அவர்கள் இருந்த கோட்டைகளுடன் சேர்த்து எரித்தார். மாலை நேரத்தில் வானத்தில் தோன்றும் அழகான பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்ற சிவபெருமான், ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


