மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

69. நிறைக்க வாலியள் அல்லள்  பாடல் - 1

காதல் கொண்ட

News image
Updated On :6 அக்டோபர் 2017, 4:59 am

முன்னுரை:

தலைவனாகிய சிவபெருமானை நினைத்து நினைத்து, அவன் மீது தீராத காதல் கொண்டு தன்வசமிழந்து பிதற்றும் தலைவியின் நிலையினைக் காணும் அவளது தாயின் கூற்றாக, அகத்துறை வகையில் அமைந்த பதிகம். தேவாரத்திலும் மற்ற திருமுறைகளிலும் அமைந்துள்ள அகத்துறை பாடல்கள், தலைவியின் கூற்றாகவும்,  தோழியின் கூற்றாகவும், தாயின் கூற்றாகவும், தூது விடும் பாடல்களாகவும், பாடல் ஆசிரியரின் கூற்றாகவும், பல விதங்களில் சுவையாக அமைந்துள்ளன. ஒரு பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் (பதிகத்தால் நாம் அடையவிருக்கும் பலன்களை விளக்கும் கடைக் காப்புப் பாடல்களைத் தவிர) அகத்துறை பாடல்களாக அமைந்துள்ள பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பதிக        தொடக்கச்            தலம்

எண்
        சொற்கள்

1.60    வண்தரங்கப் புனல்        தோணிபுரம்
1.63    எரியார் மழுவொன்று        பிரமபுரம்
1.73    வானார் சோதி மன்னு    கானூர்
1.76    மலையினார் பருப்பதம்    இலம்பயங்கோட்டூர்
2.18    சடையாய் எனுமால்        மருகல்
2.33    ஏடுமலி கொன்றை        நள்ளாறு
3.65    வாரணவு முலைமங்கை    கச்சி நெறிக்காரைக்காடு
3.104    விண்கொண்ட தூமதி        பரிதி நியமம்
4.06    வனபவள வாய் திறந்து    கழிப்பாலை
4.12    சொன்மாலை பயில்கின்ற    பழனம்
4.97    அட்டுமின் இல்பலி        நல்லூர்
5.29    நிறைக்க வாலியள்        ஆவடுதுறை
5.40    வண்ணமும் வடிவும்        கழிப்பாலை
5.45    மாது இயன்று மனைக்கு    தோணிபுரம்
5.53    கோணல் மாமதி        அதிகை வீரட்டம்
6.09    வண்ணங்கள் தாம் பாடி    ஆமாத்தூர்    
6.13    கொடிமாட நீள் தெருவு    புறம்பயம்
7.37    குருகு பாய கொழும்        திருவாரூர்
8.17    அன்னை பத்து            தில்லை

மேற்குறிப்பிட்ட பதிகங்கள் அன்றி திருவிசைப்பாவில் ஏழு பாடல்கள் அகத்துறை வகையில் அமைந்துள்ளன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்களில், தாயின் கூற்றாக அமைந்த பதிகங்கள், நிறைக்க வாலியள் என்று தொடங்கும் (529) இந்த பதிகமும், வண்ணமும் வடிவும் என்று  (5.40) தொடங்கும் கழிப்பாலைப் பதிகமும், பொய்யாத வேதியர் என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகமும், மாலுலா மனமும் என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகமும், ஆகும். 
 
பாடல் 1:
    
    நிறைக்க வாலியள் அல்லள் இந்நேரிழை
    மறைக்க வாலியள் அல்லள் இம்மாதராள்
    பிறைக் கவாலப் பெரும் புனல் ஆவடு 
    துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே

விளக்கம்:
கவால=கபால என்பதன் விகாரம்: கபாலி என்ற சொல் கவாலி என்று திரிந்தது. நிறைக்க= உடலெங்கும் நிறைவிக்க; வாலியள்=வல்லவள், தகுதி படைத்தவள்; நேரிழை=அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்; இங்கே அப்பர் நாயகியை குறிக்கின்றது; சுண்ணம்= திருநீற்றுப் பூச்சு; பாடலின் முதல் இரண்டு அடிகளை, கடை இரண்டு அடிகளின் பின்னர் வைத்து பொருள் கொள்ள வேண்டும். 

அகத்துறைப் பாடல்களாக இருந்தாலும், இறைவனைத் தலைவனாக உருவகித்து, இறைவன் மீது காதல் கொண்ட தலைவியின் நிலையின் தன்னை உருவகம் செய்து, தனது உணர்ச்சிகளைக் கூறுதல் அருளாளர்களின் வழக்கம். இறைவனைச் சென்று அடைதலே ஆன்மாவின் நோக்கமாக இருப்பதால், ஆன்மாவினை பெண்ணாக பாவித்து, ஆன்மா இறைவனை அடைய முயற்சி செய்வதை, ஆன்மா இறைவன் மீது கொண்ட காதலாக சித்தரிப்பது பக்தி இலக்கியங்களில் காணப்படும் அன்பின் வெளிப்பாடு.

காதல் கைகூட வேண்டும் என்றால் காதலனின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப் படவேண்டும் அதாவது இறைவனைச் சென்று சேருவதற்கு வேண்டிய தகுதிகளை ஆன்மா அடைய வேண்டும் அல்லவா. மனத் தூய்மை தான் அடிப்படையான தகுதி. அந்த மனத் தூய்மை தனக்கு இல்லாததாக அப்பர் பிரான் இந்த பாடலில், தாயின் கூற்றாக உரைக்கின்றார். தனது தகுதியைத் தாழ்த்திக் கொண்டு தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகமாக நமது குறைகளைச் சுட்டிக் காட்டுவது அப்பர் பிரானின் வழக்கம். இறைவனுடன் சேர்வதற்கு தகுந்த பக்குவத்தினை அடையாமல் இறைவனுடன் சேர முயற்சி செய்யும் தனது மகளின் விருப்பத்தைக் கண்டு வருந்தும் தாயின் மன உணர்ச்சிகளை வெளியிடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் நமக்கு, இறைவனைச் சென்று அடைய வேண்டும் என்று விரும்பினால் முதலில், நமது மனதினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்த்துகின்றார். 

நமது மனதினைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நால்வர் பெருமானர்கள் பல பாடல்களில் உணர்த்தியுள்ளார்கள். வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.50.1), பரபரக்கும் மனத்தினை அடக்கி, ஒன்றிய நினைவுகளுடன், வஞ்சத்தைத் தவிர்த்து, கடுமையான சொற்களைத் தவிர்த்து, காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய அறுவகைக் குற்றங்களைக் களைந்து, தூய்மையான மனத்துடன் இறைவனின் திருநாமத்தை ஓதி தான் வழிபடுவதாக சம்பந்தர் கூறுகின்றார். வல்லவாறு=தகுதிக்கு ஏற்றவாறு;
    
    ஒல்லையாறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய
    சொல்லையாறித் தூய்மை செய்து காம வினை அகற்றி
    நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்றேத்த   
    வல்லவாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே   

இந்த பதிகத்தின் பாடலில், அப்பர் நாயகியின் அன்னை, தனது மகள் தூய்மை அற்றவள் என்று குறிப்பிட்டு, அவளின் நெஞ்சத்தை தூய்மை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இறைவனிடம் விடுவதை நாம் உணர்கின்றோம். தில்லைக் கூத்தனின் திருநடனத்தைக் காணச் சென்ற அப்பர் பிரான், இறைவன் தனது நெஞ்சத்தினை தூய்மை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.23.9) காணலாம். தனது உள்ளம் எப்போதும் இறைவனைப் பற்றிய சிந்தனையுடன், இருக்குமாறு இறைவன் அருள் புரிய வேண்டும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் வேண்டுகின்றார். அவ்வாறு இல்லாத நிலையினைத் தூய்மை அற்ற நெஞ்சம் என்று அப்பர் பிரான் கருதுவதை நாம் இந்த பாடலிலிருந்து உணரலாம். இந்த நிலைக்கு இறைவன் செய்த வஞ்சனை தான் காரணம் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அழகிய சொற்களை உடைய உமையம்மை பெருமானின் நடனத்தைக் காண்பதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா
                                                            நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனே நீ
மஞ்சடை சோலைத் திங்கள் மல்கு சிற்றம்பலத்தே
அஞ்சொலாள் காண நின்று அழக நீ ஆடுமாறே

நமது மனதினில் உறையும் ஆன்மாவை இறைவனாக பாவித்து அகப்பூசை செய்யும் போது கூட, மலங்கள் நீங்கப் பெற்ற தூயமையான மனத்துடன் இருக்க வேண்டும் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் (4.76.4) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பாடலின் பொழிப்புரையும் இங்கே கூறப்பட்டுள்ளது. எனது உடலினை கோயிலாக பாவித்து, உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசங்களை கடிந்து, அந்த பாசங்கள் நீக்கப்பட்ட மனதினை சிவபிரானுக்கு அடிமையாக மாற்றி, மலங்கள் நீக்கப் பெற்ற தூய்மையான மனத்துடன், எனது மனதின் மணியாக விளங்கும் ஆன்மாவையே இலிங்கமாக பாவித்து, எனது அன்பினையே நீராகவும் பாலாகவும் நினைத்து அந்த நீரினால் இறைவனை நன்றாக நீராட்டி, எனது வணக்கங்களை இறைவனுக்கு அளிக்கும் நிவேதனப் பொருளாக படைத்து, இறைவனுக்கு நான் பூசை செய்தேன்
    
    காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக
    வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
    நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
    பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே  

பொழிப்புரை:
பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனாக, கபாலத்தைத் தனது கையினில் ஏந்தியவனாக காட்சி அளிக்கும் ஆவடுதுறை இறைவனுடன் கலந்து, அவன் தனது உடலில் பூசிக்கொண்டுள்ள திருநீறு தனது உடல் முழுவதும் படர வேண்டும் என்று எனது மகள் விருப்பம் கொள்கின்றாள், ஆனால் அவ்வாறு இறைவனுடன் சேர்ந்து ஒன்றி இருப்பதற்கான தகுதியை, மனத் தூய்மையை அடையவில்லை என்பதை, அழகிய ஆபரணங்களை அணிந்துள்ள எனது பெண் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் தனது காதல் கைகூடாததால் ஏற்பட்ட வருத்தத்தையும் மறைத்துக் கொள்ளும் திறமை அற்றவளாகவும் இருப்பதால், என்னால் அவளது நிலையை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆவடுதுறை இறைவனே, நீ தான் எனது மகளினை தூய்மைப் படுத்தி, நீ ஏற்றுகொள்வதற்கு தகுதி உள்ளவளாக அவளை மாற்றி, அவளை ஏற்றுக் கொண்டு, அவளது காதல் நிறைவேருமாறு அருள் புரிய வேண்டும்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.