துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார்சடை மேல் பிறை வைத்தவர்
மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை
உன்னுவார் வினை ஆயின ஓயுமே
விளக்கம்
துன்னு = அடர்ந்த, நெருங்கிய. உன்னுதல் = நினைத்தல். மன்னு = நிலைபெற்று இருத்தல். மன்னுவார் = நிலையாக இருத்தல்.
பொழிப்புரை
அடர்ந்தும் நீண்டும் காணப்படும் கூந்தலை உடைய பார்வதி தேவியுடன் கூடியவரும், ஒன்றோடொன்று பின்னி காணப்படும் நீண்ட சடையின் மேல் பிறையை வைத்தவரும், நிலைபெற்ற புகழினை உடைய தலமாகிய மணஞ்சேரி தலத்தில் உறைபவரும், நமது பிறவிப் பிணியினைத் தீர்க்கும் மருத்துவரும் ஆகிய பெருமானை நினைப்பவர்களின் வினைகள் அனைத்தும் ஒழியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

