பாடல் 2:
கவள மா களிற்றின் உரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசை தொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே
விளக்கம்:
கவளம்=பெரிய சோற்று உருண்டை: யானைக்கு வைக்கப்படும் உணவு உருண்டைகள் பெரிய அளவில் இருக்கும் என்பதை உணர்த்த கவள மா களிறு என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தவள=வெண்மை, வடமொழிச்சொல்: திவள வானவர்=சிறப்பாக விளங்கும் தேவர்கள்.
பொழிப்புரை:
பாலைத்துறையில் உறையும் சிவபெருமான், பெரிய சோற்றுருண்டைகளை உண்டு வாழும் வலிமை மிக்க யானையின் தோலை உரித்தவர்: வெண்மையான பற்களைக் கொண்டு, வெண்ணகை வீசும் பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவர்: சிறப்பாக விளங்கும் தேவர்களும் சிவபெருமான் இருக்கும் திசை நோக்கித் தொழுகின்றார்கள். அவர் பவளம் போன்று சிவந்த மேனியை உடையவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

கட்சிக் கொடிக் கம்பங்கள் இல்லாத கிராமம்

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


