மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 10

உடலையும் உடைய

News image
Updated On :19 நவம்பர் 2017, 6:30 pm

பாடல் 10:

    வெங்கண் வாளரவு ஆட்டி வெருட்டுவர்
    அங்கணார் அடியார்க்கு அருள் நல்குவர்
    செங்கண் மாலயன் தேடற்கு அரியவர்
    பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே 

விளக்கம்:

வெங்கண்=கொடிய கண்கள்: வாளரவு=ஒளிவீசும் பாம்பு: அடிக்கடித் தனது தோலை உரிப்பதால் பாம்பின் உடல் ஒளி வீசும். அங்கணார்=அழகிய கண்களை உடைய சிவபெருமான். பதிகத்தின் நான்கு அடிகளிலும் கண் என்ற சொல் வருவதை நாம் உணரலாம்.

பொழிப்புரை:

கொடிய கண்களையும், ஒளி வீசும் உடலையும் உடைய பாம்புகளைத் தனது உடலில் சுற்றிக் கொண்டு அவற்றை, தனது விருப்பம் போல் ஆட்டுபவர் சிவபெருமான். அழகிய கண்களை உடைய அவர், அடியார்களுக்கு எப்போதும் அருள் புரிபவராக இருக்கின்றார். தாமரை போன்று சிவந்த கண்களை உடைய திருமாலும் பிரமனும், அடி முடி காண முடியாமல் அவர்கள் தேடுவதற்கு அரியவராக, நீண்ட தீப்பிழம்பாக காட்சி அளித்த  சிவபெருமான், பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாகக் கொண்டவர். அவர்  பாலைத்துறையில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.