பாடல் 8:
கழல் கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்
தழல் கொள் மேனியர் சாந்த வெண்ணீறு அணி
அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய
குழகர் போல் திரு நாகேச்சரவரே
விளக்கம்:
சாந்தம்=சந்தனம்; ஏனையோர் நறுமணம் வீசும் சந்தனத்தை விரும்பி உடல் முழுவதும் பூசிக் கொள்வது போன்று, திருநீற்றினை இறைவன் தனது உடல் எங்கும் பூசிக் கொள்ளும் நிலை இங்கே உணர்த்த்தப் படுகின்றது. பாடம் கேட்ட சனகாதி முனிவர்கள் முதியவராக காணப்பட, அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் பெருமான் மிகவும் இளையவராக இருக்கும் நிலையை நாம் பல இடங்களிலும் காண்கின்றோம், இந்த நிலையை உணர்த்தும் பொருட்டு, இளமையுடன் அழகாக விளங்கும் பெருமான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
கழலினைத் தனது காலில் அணிந்துள்ள பெருமான், தனது அடியானாகிய சிறுவன் மார்க்கண்டேயனது உயிரைக் கவர வந்த இயமனின் மீது கோபம் கொண்டு அவனைக் காலால் உதைத்தவர் ஆவார். கொழுந்து விட்டு எரியும் தழலின் நிறத்தை உடைய பெருமான், தனது உடலெங்கும் சந்தனம் பூசிக் கொள்வது போன்று திருநீற்றினைப் பூசிக்கொண்டு மிகவும் அழகராக காணப்படுகின்றார். ஆல மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்களுக்கு வேதங்களின் பொருட்களை விளக்கிய பெருமான், இளையவராகவும் அழகியராகவும் காணப்படுகின்றார். இத்தகைய தன்மைகள் கொண்ட பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


