ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

93. மடையில் வாளைபாய - பாடல் 2

பெண்மையை மதித்து

Updated On :2 மே 2018, 4:19 am


பாடல் 2

    பெண் தான் பாகமாகப் பிறைச் சென்னி
    கொண்டான் கோலக்காவு கோயிலாக்
    கண்டான் பாதம் கையால் கூப்பவே
    உண்டான் நஞ்சை உலகம் உய்யவே

விளக்கம்:

இறைவன் இருக்கும் நிலையினை முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், பெருமானுடன் இணை பிரியாது இருக்கும் தேவியின் நிலையினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெண்மையை மதித்து பெண்மைக்குத் தனது உடலில் ஒரு பாகத்தை அளித்த தன்மையையும், பிறைச் சந்திரனுக்கு அபயம் அளித்ததையும் இந்த பாடல் குறிப்பிடுகின்றது. தக்கனது சாபத்தினால் பிறைகள் ஒவ்வொன்றாக கழிந்து ஒற்றைப் பிறையுடன்  அழிந்து கொண்டிருந்த நிலையில் தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரனுக்குத் தனது சடையில் இடம் கொடுத்து அபயம் அளித்த நிகழ்ச்சி பெருமானின் வல்லமையையும் அவரது கருணையையும் குறிப்பிடுகின்றது. உலகினை காக்கும் பொருட்டு கொடிய விடத்தினை உண்ட தியாகச் செயலும் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் பற்றற்ற நிலையினையும் எளிமையான கோலத்தையும் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில், அவனது ஆற்றல், கருணை, மற்றும் தியாக உணர்வினையும் இந்த பாடலில் குறிப்பிட்டு இறைவனின் பெருமையை உணர்த்துகின்றார். மேலும் பெருமானின் பற்றற்ற நிலை அவரது இயலாமையால் அல்ல என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.

பொழிப்புரை:

தனது மனைவியாகிய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், தனது சடையில் பிறைச் சந்திரனையும் வைத்துள்ளான். அவன் திருக்கோலக்கா தலத்தில் உள்ள கோயிலைத் தான் உறையும் இடமாக கொண்டுள்ளான். பாற்கடலில் விடம் பொங்கி எழுந்த போது அதன் தாக்கத்தினை தாங்க முடியாமல் தவித்த தேவர்கள், தனது திருப்பாதங்களைத் தங்களது (தேவர்களது) கையினால் தொழுவதைக் கண்ட பெருமான்], உலகம் உய்யும் பொருட்டு அந்த விடத்தினைத் தானே உட்கொண்டான்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.