திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

103. தேவா சிறியோம் பிழையை  - பாடல் 8

அரசனாகிய இராவணன்

News image
Updated On :27 ஜூலை 2018, 6:30 pm

பாடல் 8:

    வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை
    நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில்
    பூசை செய்து அடியார் நின்று புகழ்ந்து ஏத்த
    மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே

விளக்கம்:

மூசி=ஒலி, மூசி வண்டு=மலர்களை மொய்க்கும் போது ரீங்காரமிட்டு ஒழி எழுப்பும் வண்டுகள்;

பொழிப்புரை:

நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணன், மலையின் கீழே அமுக்குண்டு அல்லலுறும் வண்ணம் நாசம் செய்த எங்களது பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில், பூஜைகள் செய்து பெருமானின் அடியார்கள் அவனது புகழினை போற்ற விளங்குவதும், ரீங்காரமிட்டு ஒலி எழுப்பிய வண்ணம் வண்டுகள் பூக்களை மொய்க்கும் சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் தலமாகும்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.