பாடல் 8:
வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை
நாசம் செய்த நங்கள் பெருமான் அமர் கோயில்
பூசை செய்து அடியார் நின்று புகழ்ந்து ஏத்த
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே
விளக்கம்:
மூசி=ஒலி, மூசி வண்டு=மலர்களை மொய்க்கும் போது ரீங்காரமிட்டு ஒழி எழுப்பும் வண்டுகள்;
பொழிப்புரை:
நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணன், மலையின் கீழே அமுக்குண்டு அல்லலுறும் வண்ணம் நாசம் செய்த எங்களது பெருமானாகிய இறைவன் உறையும் திருக்கோயில், பூஜைகள் செய்து பெருமானின் அடியார்கள் அவனது புகழினை போற்ற விளங்குவதும், ரீங்காரமிட்டு ஒலி எழுப்பிய வண்ணம் வண்டுகள் பூக்களை மொய்க்கும் சோலைகள் உடையதும் ஆகிய முதுகுன்றம் தலமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


