திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

97. மந்திர மறையவை - பாடல் 3

முனிவர்கள் நால்வர்க்கும்

News image
Updated On :1 ஜூலை 2018, 10:02 am

பாடல் 3:

    பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
    தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
    மேலவர் பரவு வெண்காடு மேவிய
    ஆலமது அமர்ந்த எம் அடிகள் அல்லரே

 
விளக்கம்:

ஆலம்=கல்லால மரம் மற்றும் நஞ்சு என்று இரண்டும் பொருத்தமான பொருளே. பெருமானை நஞ்சு சென்று அமர்ந்த கழுத்தினை உடையவன் என்றும் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவன் என்றும் கூறலாம். நூலிழை=பூணூல். மேலவர்=சிவஞானம் மிகுந்த அடியவர்கள். பலவும் ஆடுவர் என்பதற்கு, மற்ற பல பொருட்கள் என்று பொருள் கொண்டு, தேன் முதலியவற்றை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்வார்கள். பதினொரு முறை ஸ்ரீருத்ரம் சொல்லி பெருமானை வழிபடும் முறையினில், பெருமானுக்கு எண்ணெய்க் காப்பிட்டு நீராட்டிய பின்னர், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், கருப்பஞ்சாறு, பழரசம், இளநீர் மற்றும் சந்தனம் கொண்டு அபிடேகம் செய்வதும் வழக்கம். அடிகள்=தலைவர்

பொழிப்புரை:

பால், தயிர், நெய் முதலான பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களையும் கொண்டு மிகுந்த விருப்பமுடன் நீராடும் பெருமானின் மார்பினில் தோலாடையும் பூணூலும் பொருந்தி உள்ளன. சிவஞானம் மிகுந்த அடியார்களால் துதிக்கப் படும் திருவெண்காடு தலத்தில் பொருந்தி உறையும் அவர், கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவர் ஆவார். அவர் எமது தலைவர் அல்லவா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.