ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 6

அன்னப் பறவைகள்

News image
Updated On :10 நவம்பர் 2018, 6:30 pm

பாடல் 6:

    தண் புனல் நீள்வயல் தோறும் தாமரை மேல் அனம் வைகக்
    கண் புணர் காவில் வண்டு ஏறக் கள் அவிழும் கடம்பூரில்
    பெண் புனை கூறுடையானைப் பின்னுசடைப் பெருமானைப்
    பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே

விளக்கம்:

தண்புனல்=குளிர்ந்த நீர்; அனம்=அன்னப்பறவை; புணர்தல்=அணைதல்; கண் புணர் கா= கண்கள் தாமே சென்று காணும் வண்ணம் அழகு நிறைந்த சோலைகள்; கண் கவரும் சோலைகள்; பண் புனை=பண்களுடன் இசைந்த; கள்=தேன்; அவிழும்=விரியும்;
 
பொழிப்புரை:

குளிர்ந்த நீரினை உடைய வயல்களில் தோன்றும் தாமரை மலர்கள் மேல் அன்னப் பறவைகள் தங்கி மகிழும் காட்சியும், கண் கவரும் வண்ணம் மிகுந்த அழகுடன் உள்ள சோலைகளில் வண்டுகள் ஏறி அமர்வதால் மலராக விரிந்து தேன் சொரியும் மொட்டுகள் நிறைந்து காணப்படும் காட்சியும் உடைய கடம்பூர் தலத்தில், பெண்ணைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் பின்னப்பட்ட சடையை உடையவனும் ஆகிய பெருமானின் புகழினை, இனிய பண்களுடன் இணைத்து பாடும் வல்லமை பெற்ற அடியார்களை பாவங்கள் பற்றாது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.