பாடல் 6:
பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே
விளக்கம்:
நளிர்=குளிர்ந்த; பில்குதல்=சொட்டுதல்; நவிலுதல்=சொல்லுதல், பழகுதல், விரும்புதல் என்று பல பொருள் கொண்ட சொல். முந்தைய பாடலில் பெருமான் எலும்புகளை ஆபரணமாக அணிந்திருக்கும் நிலையினை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் பூதங்கள் சூழ பெருமான் இருக்கும் நிலையை குறிப்பிடுகின்றார். எலும்புகள் பெருமானின் திருமேனியில் அழகுடன் மிளிர்வது போன்று பூதங்கள் சூழ அவன் இருப்பதும் அழகாக உள்ளது என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
தன்னைச் சுற்றி பூதங்கள் இருந்த போதும் அழகுடன் விளங்கும் பெருமான், பூந்தராய் நகரத்தின் தலைவனாக இருக்கின்றான். குளிர்ந்த கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், அந்த கங்கை நீரினை சொட்டு சொட்டாக வெளியேற்றுகின்றான். அவனது சடை நீண்டும் அழகு உடையதாகவும் விளங்குகின்றது. இத்தகைய பெருமானின் திருவடிகளின் பெருமையை தினமும் சொல்லச் சொல்ல, நமக்கு நாள்தோறும் பல இன்பங்களை இறைவன் தருவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


