பாடல் 8:
போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய்
காதலித்தான் கழல் விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள்
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே
விளக்கம்:
போதகம்=யானை; பிஞ்ஞகன்=அழகான தலைக் கோலத்தை உடையவன்; பெருக்கி=பெரிய அளவில்; இந்த கயிலை நிகழ்ச்சி மூலம், பிழை புரிந்தவர்களும் தங்களது தவறினை உணர்ந்து, இறைவனை சரணடைந்தால், அவர்களது தவறுகள் மன்னிக்கப்படுவதுடன் இறைவனது அருளும் அவர்களுக்கு கிடைக்கும் என்பது உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து அந்த தோலினைத் தனது உடல் மீது போர்வையாக போர்த்துக் கொண்ட சிவபெருமான், மிகுந்த விருப்பம் கொண்டு பூந்தராய் நகரில் உறைகின்றான். வீரக்கழல் அணிந்த தனது கால் விரல் ஒன்றினை, கயிலாய மலையின் மீது அழுத்தி, அந்த மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் ஆற்றலை அழித்தவன் ஆவான். பின்னர் அரக்கன் சாமகானம் பாடி தன்னைப் புகழ்ந்ததும், பெரிய அளவில் அவனுக்கு அருள் புரிந்து நீண்ட வாழ்நாள், சிறந்த வாள் மற்றும் இராவணன் என்ற பெயரினையும் அளித்தவன் பெருமான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


