தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விருதுகள் 2023

தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு "பத்ம ஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டது.  

News image
Updated On :31 டிசம்பர் 2023, 3:30 am

DIN


ஜனவரி

26: தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வல்லுநர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு "பத்ம ஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டது.  

மார்ச்

8:: எழுத்தாளர், சமூக ஆர்வலர் ஆர்.கமலம் சின்னசாமிக்கு "ஒளவையார் விருதை' முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மின்தூக்கியில் (லிஃப்ட்) நிகழும் விபத்துகளைத் தடுக்கும் கருவியை உருவாக்கிய ப்ளஸ்-1 மாணவி இளந்திரைக்கு "சிறந்த மாணவர் விருது' வழங்கப்பட்டது. 
13: "ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் "நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.  

ஜூன்

5:: உயிர்க்கோள பாதுகாப்பு மேலாண்மையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தின் இயக்குநரும் ராமநாதபுரம் மாவட்ட வனஅதிகாரியுமான பகன் ஜகதீஷ் சுதாகருக்கு யுனெஸ்கோவின் "மைக்கேல் பாடிஸ்úஸ விருது' வழங்கப்பட்டது. 
22:: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் கே.சுகந்தி உள்பட 30 பேருக்கு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது 2023-ஐ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். 

Story image

ஜூலை

14:: பிரெஞ்சு மொழியைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியை நளினி ஜெ.தம்பிக்கு  "செவாலியர் விருதை' பிரெஞ்சு அரசு வழங்கியது. 
செப்டம்பர்
23:: தில்லியில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஆர்ஆர்ஐ) வேளாண் விஞ்ஞானி சுவாதி நாயக்குக்கு நார்மன் இ.போர்லாக் விருது வழங்கப்பட்டது. இவர் இந்த விருதைப் பெறும் 3-ஆவது இந்தியராவார். 
26:: இந்திய திரைப்படத் துறையில் உயரிய விருதான 2021-ஆம் ஆண்டுக்கான "தாதா சாகேப் பால்கே விருது' நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டது.

அக்டோபர்

6:: ஈரானில் பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் நர்கீஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
9:: தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்களிப்பு, பணியிடத்தில் பாலின இடைவெளி, ஊதிய முரண்பாடு ஆகியவை தொடர்பான புரிதல்களை மேம்படுத்தும் ஆய்வுகளுக்காக க்ளாடியா கோல்டினுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.