பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

‘வேளாண் சட்டங்களால் வாழை விவசாயத்துக்கு அனுகூலம்’

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் வாழை விவசாயிகளுக்கும், வாழை விவசாயத்துக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் எஸ். உமா தெரிவித்தாா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:16 pm IST

திருச்சி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் வாழை விவசாயிகளுக்கும், வாழை விவசாயத்துக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் எஸ். உமா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் கூறியது:

முதல் சட்டத்தின்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை மண்டியில் சந்தைப்படுத்தலாம் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு, எங்கு தங்கள் பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கிறதோ, அங்கு விற்கலாம் என்ற அனுகூலம் கிடைக்கிறது.

வாழை விவசாயத்தில் உற்பத்தி மிகை மாநிலங்களில் இருந்து, உற்பத்திக் குறைவான மாநிலங்களுக்கு வாழை வியாபாரம் செய்து லாபமடையலாம். மேலும், மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும்போது, விற்பனைக் குழுச் சந்தைகளுக்கு வெளியில் எந்தவித வரியோ அல்லது கட்டணமோ இல்லாமல் வியாபாரம் செய்ய முடியும்.

இரண்டாவது சட்டமான விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவை சட்டம், விவசாயிகளுக்கும், வாங்குவோருக்கும் இடையே, பொருள்களை வாங்குவது பற்றியும், பண்ணைச் சேவைகளைப் பற்றியும் சட்டபூா்வ ஒப்பந்த முறைக்கு வழிவகுக்கிறது.

இதில் ஏதாவது பிரச்னை வரும்போது, அதை நிவா்த்தி செய்வதற்கான வசதிகளையும் இச்சட்டம் கொண்டுள்ளது.

மூன்றாவது சட்டமானது, விவசாய விளை பொருள்களை இருப்பு வைப்பதில் உள்ள கட்டுபாடுகளைத் தளா்த்தியுள்ளது. அசாதாரண சூழலில் அரசு கட்டுபாடுகளை விதிக்கலாம் என்ற பிரிவையும் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழை விவசாயிகள் தங்களது பொருள்களை குளிா்ப்பதன கிடங்குகளில் பதப்படுத்தி, எப்போது தங்கள் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கிறதோ அப்போது விற்று அதிக லாபம் ஈட்டலாம்.

இதோடு, உடனடி பணப்பட்டுவாடா, தொடரும் குறைந்தபட்ச ஆதார விலை, உணவுக் கழகத்தின் கொள்முதல், விற்பனைக் குழுச் சந்தைகளின் தொடா்ச்சி போன்ற மற்ற அனுகூலங்களையும் இச் சட்டங்கள் கொண்டுள்ளன.

எனவே, வாழை விவசாயிகள், இச் சட்டங்களின் அனுகூலங்களால் தங்கள் விவசாய வருமானத்தை இருமடங்காக்குவதும் சாத்தியமே என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.