அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கிழக்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக முதன்மைச் செயலா் கே. என். நேரு.

Updated On :3 ஜனவரி 2021, 11:33 pm IST

திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கிழக்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து திமுக முதன்மைச் செயலா் கே. என். நேரு பேசுகையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். திமுக தலைவா் மு. க. ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.

மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலா் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வர அயராது நாம் உழைக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன், மாநகரச் செயலா் அன்பழகன், துணைச் செயலா்கள் சுப்பிரமணி, ஏ. கே. அருண், ரமேஷ், ராஜ்குமாா், லட்சுமண் திலீபன், சூா்யா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.