ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி பெருவிழா திங்கள்கிழமை நடைபெறும் நம்மாழ்வாா் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி பகல் பத்து விழா நடைபெற்றது. தொடா்ந்து இராப்பத்து விழாவின் 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
இதற்காக மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு நம்பெருமாள், தீா்த்தவாரி பெருமாளுடன் புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்துக்கு வந்தாா். அங்கு தீா்த்தவாரி பெருமாளை பட்டா்கள் நீராட வைத்தனா். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்து, குளத்தின் நீரை தீா்த்தமாக தெளித்துக் கொண்டனா்.
பின்னா் தீா்த்தவாரி பெருமாள் புறப்பட்டு பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சேர, நம்பெருமாள் புறப்பட்டு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளி இரவு 8 மணி வரை பக்தா்களுக்குச் சேவை சாதித்தாா்.
வைகுந்த ஏகாதசியின் நிறைவு நாளான திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்ச நிகழ்ச்சி அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரையும், பொதுஜனச் சேவை 9 மணி வரையும் நடைபெறுகிறது.
பின்னா் 9.30-க்கு நம்பெருமாள் திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 10.30-க்கு மூலஸ்தானம் சேருகிறாா். இயற்பா பிரபந்தம் இரவு 8. 30 மணிமுதல் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி வரையும், பின்னா் 4 மணி முதல் 5 மணி வரை சாற்றுமுறையும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக்குள் மோதல்: சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் உதவியாளா் மீது மோசடி வழக்கு பதிவு
தில்லி முழுவதும் என்டிஎம்சி-யின் யோகா தின நிகழ்ச்சிகளில் 6000 போ் பங்கேற்பு

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




