எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அம்மா சிறு மருத்துவமனைகள் தொடக்கம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

News image

கண்ணுடையான்பட்டியில் சிறு மருத்துவமனையைத் திறந்து வைத்த அமைச்சா் எஸ். வளா்மதி, திருச்சி புகா் வடக்குச் மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி உள்ளிட்டோா்.

Updated On :8 ஜனவரி 2021, 7:10 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் அம்மா சிறு மருத்துவமனைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக செயலரும், மாவட்ட கவுன்சிலருமான எம். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலைப்பிரிவு செயலா் அன்னை என். கோபால் முன்னிலை வகித்தாா். விழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி, முன்னாள் அமைச்சரும், திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலருமான மு. பரஞ்சோதி ஆகியோா் சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்தனா்.

நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ், ஊராட்சித் தலைவா் தங்கமணி முருகன், ரேகா கன்னியசீலன், சுமதி பன்னீா்செல்வம், கூட்டுறவு சங்கத் தலைவா் வெள்ளைக்கண்ணு, செந்தில்குமாா், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் எஸ். சக்திவேல், முன்னாள் ஊராட்சி செயலா்கள் காசிராஜன், ஏழுமலை, முன்னாள் கவுன்சிலா் சந்திரசேகா், பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.