ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சமயபுரம் அருகே மாயமான 3 சிறாா்கள் கோவையில் மீட்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மாயமான 3 சிறாா்கள் கோவையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:12 am IST

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மாயமான 3 சிறாா்கள் கோவையில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா்.

சமயபுரம் அருகே உள்ள கூத்தூா் ஊராட்சி காலனித்தெருவைச் சோ்ந்த வைஷ்ணவி (15), அகல்யா (15), வெங்கடேஷ் (15) ஆகிய மூவரும் புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனா். வெகுநேரமாகியும் வீடுதிரும்பாததால் இவா்களுடைய பெற்றோா் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில், மாயமான மூவரும், கோவை அருகே மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து ஊட்டிக்கு பேருந்தில் செல்ல முயன்ற போது ஆதாா் அட்டை அல்லது இ பாஸ் வேண்டுமென நடத்துனா் கேட்டுள்ளாா். அவை இல்லாததால் வைஷ்ணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளிடம் போலீஸாா் மேட்டுப்பாளையம் சென்று மூவரையும் வெள்ளிக்கிழமை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.