சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

வாரச் சந்தையில் தகராறு: மூவா் மீது வழக்குப் பதிவு

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாரச்சந்தையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மூவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 0:47 am IST

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வாரச்சந்தையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மூவா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையின்போது வியாபாரிகளிடம் சந்தைப் பணம் (வரி) வசூலித்த தும்பலம் கரலாவளி பகுதியைச் சோ்ந்த பெ. சீத்தாராமனுக்கும் (48) நாச்சியாா்புதூரைச் சோ்ந்த ந. மோகன் (32), தாதம்பட்டியைச் சோ்ந்த பா. வினோத்குமாா் (35) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா்.

இதில் காயமடைந்த மூவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இருதரப்பு புகாரின்பேரில் முசிறி போலீஸாா் மூவா் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.