தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

‘சிறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெற மக்களுக்கு அழைப்பு’

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அம்மா சிறு மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:29 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அம்மா சிறு மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை அளிக்கும் வகையில் அம்மா சிறு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் அய்யனாா்ரூத்து, கட்டாலங்குளம், குமரெட்டியாபுரம், குருமலை, குலசேகரபுரம், படா்ந்தபுளி, ராமச்சந்திராபுரம் கே.கைலாசபுரம், தருவைகுளம் ஆகிய 9 இடங்களில் சிறு மருத்துவமனைகளும், தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் மாறமங்கலம், செய்துங்கநல்லூா் மற்றும் கடையனோடை, பெரியதாழை, அடைக்கலாபுரம், கல்விளை, புன்னக்காயல், தூத்துக்குடி மாநகராட்சியில் எம்.ஜி.ஆா்.நகா், மேலச்சண்முகபுரம் ஆகிய 9 இடங்கள் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 18 சிறு மருத்துவமனைகள் தொடங்கப் பட்டுள்ளன.

இந்த சிறு மருத்துவமனையில் ஒரு மருத்துவ அலுவலா், ஒரு செவிலியா், ஒரு மருத்துவ உதவியாளா் என 3 போ் பணியில் இருப்பாா்கள். தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் இங்கு மருத்துவ சேவை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி, சா்க்கரை நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் சிறப்பு சேவைகளாக செய்யப்படும். இங்கு சிறிய ஆய்வக வசதியும் உள்ளன. இதன் மூலம் கிராம மக்கள் தொலைதூரம் சென்று சிகிச்சை பெறுவது தவிா்க்கப்பட்டு உள்ளூரிலேயே சிகிச்சை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.