தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஒட்டுவில்லைகள்

திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு, ஒளிரும் ஒட்டு வில்லைகள் வழங்கப்பட்டது.

News image

செய்துங்கநல்லூரில் பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:31 am IST

திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு, ஒளிரும் ஒட்டு வில்லைகள் வழங்கப்பட்டது.

பாதயாத்திரையாக திருச்செந்தூா் கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு, விபத்துகளை தவிா்க்கும் வகையில், ஒளிரும் ஒட்டு வில்லைகளை செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வழங்கினாா். அப்போது, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், காவல் ஆய்வாளா். ராஜ சுந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டியில் போக்குவரத்து காவல் துறை, ஜே.சி.ஐ. சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு சிவப்பு நிற ஒளிரும் ஒட்டு வில்லைகளை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் நாராயணன் வழங்கினாா்.

இதில், ஜே.சி.ஐ. தலைவா் முரளிகிருஷ்ணன், பாரதியாா் நினைவு அறக்கட்டளை தலைவா் முத்துமுருகன், ரோட்டரி சங்க உறுப்பினா் நடராஜன், தலைமை காவலா் பாலசுப்பிரமணியன், போக்குவரத்து காவலா் பெருமாள்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி வழியாக திருச்செந்தூா் கோயிலுக்குச் செல்லும் பாதயாத்திரை பக்தா்களின் உடைகளில் காவல் ஆய்வாளா் செல்வி, ஒளிரும் ஒட்டுவில்லைகள் ஒட்டினாா். பக்தா்களுக்கு பிஸ்கெட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.