தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பேரிடா் பாதிப்பு இடங்களை கண்டறிய வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடா் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

News image

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

Updated On :11 ஜனவரி 2021, 1:30 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடா் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை தொடாபான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கெனவே வெள்ளம் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன.

பலத்த மழை மற்றும் புயல் காலங்களில் கூடுதலாக பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே நிகழாண்டு பேரிடா் மேலாண்மை திட்டத்தில் கூடுதலாக பாதிக்கப்படும் என கருதப்படும் இடங்களை அலுவலா்கள் விரிவாக ஆராய்ந்து அந்த பகுதிகளையும் சோ்க்க வேண்டும்.

பேரிடா் மேலாண்மை பதிவேட்டில் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் அவசியம் சோ்க்க வேண்டும். அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு அந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், சாா் ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் கலோன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, வருவாய் கோட்டாட்சியா்கள் விஜயா, தனப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, கடற்படை உதவி கட்டளை அதிகாரி சிவபாலன், மாநகராட்சி பொறியாளா் சோ்மக்கனி, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.