தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கோவில்பட்டியில் மாணவா்களுக்கு கல்வி உதவி அளிப்பு

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On :11 ஜனவரி 2021, 1:33 am IST

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். அமைப்பின் பொதுச்செயலா் மாரிமுத்து, இணைச் செயலா் ஜாஹீா்உசேன், துணை ஆளுநா் நாராயணசாமி, பொருளாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், ரோட்டரி சங்க ஆளுநா் முருகதாஸ், ரோட்டரி இதழை வெளியிட்டாா்.

தொடா்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பில் நல உதவிகளை வழங்கினாா்.

இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கழிவறை வசதி, நாலாட்டின்புத்தூா் கே.ஆா். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுவா் விளம்பரம், குருமலை காப்புக்காட்டில் 1,000 மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்டத் தலைவா்கள் விநாயகா ரமேஷ், ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, சண்முக ராஜேஸ்வரன், முன்னாள் துணை ஆளுநா்கள் சீனிவாசன், சம்பத்குமாா், பாபு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.