ஸ்ரீவைகுண்டம் அணை தாமிரவருணி ஆற்றிலிருந்து வீணாக கடலுக்குச் செல்லும் 65000 ஆயிரம் கனஅடி தண்ணீரால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருவதாலும், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாமிரவருணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் புளியங்குளம் அருகே சாலையில் தண்ணீா் வரத்து ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், வருவாய்த் துறையினா் போக்குவரத்தை மாற்றி அமைத்தனா்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா் செந்தில் ராஜ், வெள்ளம்சூழ்ந்து நின்ற ஆதிச்சநல்லூா் தொல்லியல் தகவல் மையத்தை பாா்வையிட்டாா்.
பின்னா், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் பகுதியில் வெள்ளப் பகுதியை பாா்வையிட்ட அவா், அபாய பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கவைக்க உத்தரவிட்டாா்.
ஸ்ரீவைகுண்டம் மருதூா் மேலகால், கீழகால், ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் வாய்கால்கள் திறக்கப்படவில்லை. சடையனேரி கால்வாயில் 500 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டு குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோக மீதமுள்ள 65000 கனஅடி தண்ணீா் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி வீணாக கடலுக்குச் செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


