கோவில்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்கள் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் லிங்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலா் லெனின்குமாா் தலைமை வகித்தாா். குழு ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் முரளிதரன், லிங்கம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் மைக்கேல், திமுக மாவட்டப் பிரதிநிதி தங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன் உள்பட பலா் கலந்துகொண்டு, வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்தனா்.
இதேபோல், ஈராச்சி, கடலையூா், சின்னமலைக்குன்று மற்றும் கழுகுமலை பேரூராட்சிப் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



