சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அருள் விருந்து!

Updated On :21 மார்ச் 2013, 11:12 am

1. கடலை ஆழம் பார்க்கலாம்.சான்றோர் உள்ளமோ கடலினும் ஆழமானது. ஆயினும் அதில் அளப்பரிய எளிமை நிறைந்துள்ளது.

2. உயிர்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை என்று அறிந்து அவற்றை நேசிப்பதே நல்ல நேசமாகும்.

3. சுயநலத்துக்காகவென்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையாகாது. உண்மையான பிரார்த்தனையில் மனிதன் தன்னை மறந்து விடுகிறான்.

4. உலகப்பற்று உடையவன் மக்களுள் கடையானவன். தெய்வப்பற்று உடையவன் மக்களுள் தலையானவன்.

5. கடவுளை நேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு எவன் மனிதரை வெறுக்கின்றானோ அவன் பொய்யன்.

6. தங்களைக் கேடுகளினின்று உய்வித்துக் கொள்ள வல்லவரே பிறரையும் கேடுகளினின்று உய்விக்க வல்லவர் ஆகின்றனர்.

7. உன்னிடமுள்ள ஆத்ம சக்தியைப் பற்றி சதா சிந்தித்துக் கொண்டிரு. அதனால் நீ ஆற்றல் மிகப் படைத்தவன் ஆவாய்.

8.  பனிக்கட்டியானது வெயிலில் உருகித் தனது வடிவத்தை இழக்கிறது. சான்றோர் அருளில் உருகித் தங்கள் மருளை நீக்குகின்றனர்.

சுவாமி சித்பவானந்தர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.