குடியாத்தம் நகரில் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை, வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடா்பாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளா் க.காந்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடியாத்தம் பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் பருத்தி ஏல விற்பனை தொடங்க உள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமைகளில் இங்கு பருத்தி ஏல விற்பனை நடைபெறும்.
இக்கூடத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல் விற்பனை செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை பருத்தியை எடையிடும் பணி நடைபெறுவதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை மேற்கண்ட நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எடையிட்டுக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









