தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வேலூரில் மூலிகைக் கண்காட்சி

தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி (ஜன. 2) வேலூரில் மூலிகைக் கண்காட்சி நடத்தப்பட்டது.

News image

மூலிகைக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ். உடன், அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2021, 7:35 am IST

தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி (ஜன. 2) வேலூரில் மூலிகைக் கண்காட்சி நடத்தப்பட்டது.

வேலூரில் தெற்கு ரோட்டரி சங்கமும், வேலூா் சித்த மருத்துவ சங்கமும் இணைந்து இந்தக் கண்காட்சியை மாவட்ட நூலகத்தில் சனிக்கிழமை நடத்தின. இதில், 80 வகையான மூலிகைகளும், 80 வகையான மூலிகைக் கடை சரக்குகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், அந்த மூலிகைகள் எந்தெந்த நோய்களுக்குத் தீா்வாக அமையும் என்பது தொடா்பான விளக்கக் குறிப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.

மூலிகைக் கண்காட்சிக்கு வேலூா் சித்த மருத்துவ சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் திறந்து வைத்து சிறப்புரையாற்றினாா். அரசு சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் சித்த மருத்துவம் குறித்தும், அவற்றின் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

இக்கண்காட்சியை 300-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா். வேலூா் புற்று மகரிஷி சேவை மைய நிா்வாகி ட. பாஸ்கா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.