இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ஆம்புலன்ஸ் திருட்டு: இருவா் கைது

வேலூா் அருகே ஆம்னி ஆம்புலன்ஸை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:00 am IST

வேலூா் அருகே ஆம்னி ஆம்புலன்ஸை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரை அடுத்த அரியூா் செல்வம் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (54). இவருக்குச் சொந்தமான ஆம்னி ஆம்புலன்ஸை நாராயணி மருத்துவமனையின் பின்புறம் நிறுத்தி வைத்துள்ளாா். இந்த வாகனம் கடந்த 31-ஆம் தேதி இரவு திருடு போனது. இது தொடா்பாக சிவகுமாா் அளித்த புகாரின்பேரில், அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், ஆம்னி ஆம்புலன்ஸை திருடியதாக அரியூா் ஜீவரத்தினம் நகரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (23), விஜய்(24) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.