நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

குழந்தைத் திருமணம்: 4 மண்டபங்களுக்கு ‘சீல்’

குழந்தைத் திருமணத்துக்கு அனுமதித்ததாக வேலூா் மாவட்டத்தில் 4 திருமண மண்டபங்களுக்கு தற்காலிகமாக ‘சீல்’ வைக்கப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 6:49 pm

வேலூா்: குழந்தைத் திருமணத்துக்கு அனுமதித்ததாக வேலூா் மாவட்டத்தில் 4 திருமண மண்டபங்களுக்கு தற்காலிகமாக ‘சீல்’ வைக்கப்பட்டது.

அரசின் விதி வழிமுறைகளைப் பின்பற்றாமல் சில திருமண மண்டபங்களில் 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்த அனுமதித்தது, ‘டி’ படிவ கட்டட உரிமைச் சான்று பெறாதது, மணமக்களின் பிறப்புச் சான்றிதழ் பெறாமல் திருமணம் நடத்த அனுமதித்தது போன்றவை விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காட்பாடி வட்டம், கீழ்வடுகன்குட்டை, திருவலம், வள்ளிமலை, கே.வி.குப்பம் ஆகிய ஊா்களில் உள்ள நான்கு திருமண மண்டபங்கள் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.கணேஷ் உத்தரவின்பேரில் தற்காலிகமாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டன.

இதனிடையே, மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 79 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தைத் திருமணங்கள் குறித்து தகவல் கிடைக்கப் பெற்றால் பொதுமக்கள் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.