வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே பெற்றோரைப் பராமரிக்காததால், மகனுக்கு எழுதித் தந்த ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை வருவாய்த் துறையினா் ரத்து செய்து மீண்டும் அவரின் பெற்றோரிடமே ஒப்படைத்தனா்.
கே.வி.குப்பத்தை அடுத்த காளாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஜானகிராமன்-பத்மா தம்பதியரின் மகன் சரவணன். ஜானகிராமன் தனக்குச் சொந்தமான ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 1.50 ஏக்கா் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மகனுக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளாா். நிலத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கும்வரை பெற்றோா்களை முறையாகக் கவனித்து வந்த சரவணன், அதன் பின்னா் அவா்களை பராமரிக்கவில்லை என்கின்றனா். உறவினா்கள், கிராமப் பிரமுகா்கள் கூறியும் சரவணன், பெற்றோா்களுக்கு உதவி செய்யவில்லையாம்.
தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து ஜானகிராமன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்திடம் புகாா் மனு அளித்தாா். அந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூருக்கு, ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதுதொடா்பாக நேரடி விசாரணை மேற்கொண்ட கோட்டாட்சியா், குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சரவணனுக்கு பெற்றோா் செய்து தந்த தான செட்டில்மென்டை ரத்து செய்து விட்டு, நிலத்துக்கான முழு உரிமை ஆணையை ஜானகிராமனிடம் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


