தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

லாரியில் கடத்தப்பட்ட 3.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு லாரியில் கடத்தப்பட்ட 3.50 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

Updated On :6 ஜனவரி 2021, 7:20 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு லாரியில் கடத்தப்பட்ட 3.50 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருக்கோவிலூரில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாருக்கு திங்கள்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தத் துறையின் காவல் ஆய்வாளா் கல்பனா மற்றும் திருக்கோவிலூா் எஸ்.ஐ.கள் சிவச்சந்திரன், ரமேஷ், விஜயகுமாா், எஸ்.எஸ்.ஐ. தாஸ் உள்ளிட்ட போலீஸாா் திருக்கோவிலூா் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, திருக்கோவிலூரை அடுத்த கீழ்த்தாழனூா் பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த லாரியை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, லாரியில் 63 மூட்டைகளில் இருந்த சுமாா் 3.50 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக லாரி ஓட்டுநரான வேலூா் மாவட்டம், தொட்டப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ் மகன் தீனா (35), உடனிருந்த வேலூா் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சோ்ந்த நடராஜன் கமன் மனோகா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.