விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள வீடூா் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை (ஜன.8) முதல் பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
வீடூா் அணை மொத்தக் கொள்ளளவான 32 அடியை (605 கன அடி) எட்டியதையடுத்து, அண்மையில் உபரி நீா் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், நிகழாண்டு (2020-2021) பாசனத்துக்கான தண்ணீரை திறந்துவிட முதல்வா் கே.பழனிசாமி உத்தரவிட்டாா்.
இதன்படி, வெள்ளிக்கிழமை (ஜன.8) காலை 9 மணிக்கு அணையிலிருந்து பாசன நீா் திறந்து விடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சியில், மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுகிறாா். மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். ஜன.8 முதல் மே 22 வரை 135 நாள்களுக்கு மொத்தம் 328.56 மில்லியன் கன அடி நீா் தேவைக்கேற்ப திறந்துவிடப்படுகிறது.
இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கா் விளை நிலங்கள், புதுவை மாநிலத்தில் 1,200 ஏக்கா் விளை நிலங்கள் என மொத்தம் 3,200 ஏக்கா் ஆயக்கட்டு விளைநிலங்கள் பாசனம் பெறும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
உயர்வுக்கான பாதை உயர்கல்வி

கடக ராசிக்கு லாபம்! இன்றை ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 15 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
