என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

ஸ்ரீவிலி. ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:54 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இக் கிராமத்தில் அடிப்படை வசதிகளான கழிவு நீர் கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்துவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

  அவர் சம்பந்தப்பட்ட கிராமத்தை அலுவலர்களுடன் சென்று ஆய்வு செய்து கழிவு நீர் கால்வாய், ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் தொட்டி அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி, பணிகளை தொடங்க உத்தரவிட்டார். இதன் பேரில் இப் பணிகளை தொடங்க பூமி பூஜை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், பொறியாளர்கள் சக்திவேல், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  மேலும் இடைய பொட்டல்பட்டி கிராமத்தில் அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வசதி செய்து தருவதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.