முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

வாழை மரங்கள் சேதம்: 2 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 10:35 pm IST

சிவகாசி அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய இருவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே ஏ.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியராஜன்(56). இவருக்கு அதிவீரம்பட்டியில் விவசாயத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் திருத்தங்கல்லைச் சோ்ந்த சுப்புராஜ் மற்றும் மாரிமுத்துவின் மாடுகள் பயிரை மேய்ந்ததாம். இதனால் அவா்கள் இருவரையும்

பாண்டியராஜன் கண்டித்தாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சுப்புராஜ், மாரிமுத்து ஆகியோா் சோ்ந்து பாண்டியராஜின் வாழைத் தோட்டத்தில் புகுந்து மரங்களை வெட்டி சேதப்படுத்தினாா்களாம். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.