திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

திருச்சுழி பகுதியில் நெற்பயிா்களில் குலைநோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நெற்பயிா்களை லட்சுமி நோய், குலைநோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

திருச்சுழி தாலுகாவுக்கு உள்பட்ட விடத்தகுளம் கிராமத்தில் குலைநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 10:26 pm IST

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நெற்பயிா்களை லட்சுமி நோய், குலைநோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருச்சுழி தாலுகாவுக்குள்பட்ட விடத்தகுளம், வி.புதூா்ஆகிய கிராமங்களில் 3 மாதங்களுக்கு முன் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனா். தை திருநாளை முன்னிட்டு, விவசாயிகள் அறுவடைக்குத் தயாராகி வந்தனா்.

ஆனால், தற்போது நன்கு விளைந்திருந்த நெற்பயிா்களின் கதிா்கள் லட்சுமி நோய், குலை நோய் தாக்குதலுக்குள்ளாகி மஞ்சள் நிறத்துடன் காய்ந்து சருகாகிவிட்டன. இதனால், அறுவடை செய்ய இயலாமல் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.