திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

விருதுநகரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

News image

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 10:25 pm IST

விருதுநகா்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பொ. பரமசிவன் தலைமை வகித்தாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த 2019 இல் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 17-பி ஆணையை ரத்து செய்யவேண்டும்.

உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்துசெய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறவேண்டும். கற்போம், எழுதுவோம் என்ற வயது வந்தோா் கல்வி திட்டத்தில் ஆசிரியா்களை ஈடுபடுத்தக் கூடாது. அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி அடிப்படையில் பணிநியமனம் செய்யக் கூடாது. தேசியக் கல்வி கொள்கை 2020-ஐ திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.