நரிக்குடி பகுதியில் மழையால் சேதமடைந்த நெற்பயிா் மற்றும் வெங்காயத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
விருதுநகா் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் பிள்ளையாா்குளம், ஆவரங்குளம் பகுதியில் சுமாா் 80 ஏக்கரில் விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டிருந்தனா். இந்நிலையில் தொடா் மழை மற்றும் புரவி, நிவா் புயல்களால் அறுவடைக்குத் தயாராக இருந்த வெங்காய பயிா்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. இதுகுறித்து வருவாய்த்துறையினா் கணக்கிட்டு, அரசு சாா்பில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தனா். ஆனால், களத்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிள்ளையாா்குளம், ஆவரங்குளம் விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணத் தொகை வழங்கப்பட வில்லையாம்.
எனவே, தங்களுக்கும் விரைந்து நிவாரணத் தெகை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அக்கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அதேபோல், நரிக்குடி ஒன்றியப் பகுதியில் கிருதுமால் நதி உழக்குடி வழியில் உள்ள மானூா் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் முக்குளம், சேந்தநதி, ஆயக்குளம் கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து விட்டன. எனவே, இப்பகுதியில் சேதமடைந்த நெற்பயிா்களை அரசு அலுவலா்கள் ஆய்வு செய்து விரைந்து நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகா் கிழக்கு மாவட்ட பாஜக விவசாய அணி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சி கவிழாது! தவெக அரசுக்கு துணை நிற்போம்! திருமாவளவன்

மேயர் பிரியா, சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி! மொபைல் எண் தெரியாமலேயே 'மெசேஜ்' செய்யலாம்!

அமெரிக்காவுக்காக பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்! டிரம்ப் அறிவுறுத்தல்
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |



