அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

மேயர் பிரியா, சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!

மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி...

News image

மேயர் பிரியா, சேகர்பாபு கைது. - படம்: விடியோ கிளிப்

Updated On :30 ஜூன் 2026, 10:42 am IST

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய மேயர் ஆர். பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற விடியோ வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Summary

Case registered against Mayor Priya and Minister Sekar Babu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.