சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்த பிறகு சென்னை மாநகராட்சியின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செலவீனங்களை முறைப்படுத்தும் பணிகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வருவாயைப் பெருக்கவும், சொத்து வரி மற்றும் தொழில் வரி ஆகியவற்றை முழுமையாக வசூலிக்க சிறப்பு முகாம்களும் வார்டு வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் விடப்பட்ட வேளச்சேரி மேம்பாலத் திட்டம் உள்பட ரூ. 700 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநகராட்சியின் நிதிச்சுமை சீரடைந்த பிறகு, மறுஆய்வு செய்யப்பட்டு, அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 நடைபாதை அமைக்கும் டெண்டர்கள் முதல்வர் ஜோசப் விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது.
குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்குச் சாதகமாக ஒப்பந்தங்களை முன்கூட்டியே தீர்மானித்தது, திட்டச் செலவு செயற்கையாக அதிகரித்தது போன்ற முறைகேடுகள் காரணமாக டெண்டர்களை ரத்து செய்ய நகராட்சி நிர்வாகத் துறையை வைத்திருக்கும் முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்து வருவதால், மேயர் ஆர். பிரியா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Summary
Chennai Corporation's ₹700 crore tenders cancelled! What will Mayor Priya do?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேயர் பிரியா, சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!

சென்னையில் திமுக போராட்டம்: மேயர் பிரியா, சேகர்பாபு கைது!
ரீல்ஸ் ஆட்சிக்காக ரியல் ஆட்சியை இழந்துவிட்டோம் என மக்கள் வருத்தம்! மேயர் பிரியா
கவர்ச்சியால்தான் தவெக வென்றது: சென்னை மேயர்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




