நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்! எதற்கு தெரியுமா?

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்துள்ளது தொடர்பாக...

chennai mayor priya

மேயர் பிரியா - x / mayor priya

Published On :

சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை தருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தின் இளம் மேயர் என்று அறியப்படும் சென்னை மேயர் பிரியா, இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

சில மர்ம நபர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறாக பேசுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வாட்ஸ்ஆப் மூலமாக சிலர் தொடர்ந்து தொல்லை தருவதாகவும் தனது புகைப்படங்களைத் தவறாகச் சித்தரித்து வெளியிடுவதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் பேசிய விடியோக்களையும் வைத்து மர்ம நபர்கள் அவதூறு பரப்புவதாகக் கூறியுள்ளார்.

காவல்துறையினர் விரைந்து இந்த மனு மீதான விசாரணையைத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Summary

Mayor Priya lodges a complaint at the Chennai Police Commissioner's office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.