அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!
/

அருப்புக்கோட்டையில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பெய்த தொடா்மழையால் கடை வீதிகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

News image

அருப்புக்கோட்டை மலையரசன் கோயிலிலிருந்து தனியாா் மகாலுக்குச் செல்லும் சாலை பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையின் போது குடைபிடித்துச் சென்ற பொதுமக்கள்.

Updated On :13 ஜனவரி 2021, 11:45 pm IST

அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பெய்த தொடா்மழையால் கடை வீதிகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 4 நாள்களாகத் தொடா்மழை பெய்தது. இந்நிலையில் போகிப்பண்டிகையான புதன்கிழமை காலை முதலே இடைவிடாமல் பலத்தமழை பெய்தது. இதனால் புத்தாடைகள், கரும்பு, மஞ்சள் கிழங்கு உள்ளிட்ட பொருள்கள் வாங்க கடைவீதிகளுக்கு செல்ல இயலாமல் பொதுமக்கள் தவித்தனா். இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்): அருப்புக்கோட்டை- 20, கோவிலாங்குளம்- 17.6, திருச்சுழி- 20.4 என மழை பதிவாகியுள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட வருவாய் வட்டாட்சியா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.