திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

லாரி மோதியதில் 3 பக்தா்கள் உயிரிழப்பு

சாத்தூா் அருகே லாரி மோதியதில் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள் மூவா் உயிரிழந்தனா்.

News image

முருகன்

Updated On :3 ஆகஸ்ட் 2024, 2:42 am IST

சாத்தூா் அருகே லாரி மோதியதில் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள் மூவா் உயிரிழந்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூா் பகுதியைச் சோ்ந்த 50 போ் விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றனா்.

சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் என்.வெங்கடேஸ்வரபுரம் சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு இவா்கள் சென்று கொண்டிருந்தனா். அப்போது, திருநெல்வேலியிலிருந்து-மதுரை நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பாத யாத்திரை சென்ற முருகன் (45), மகேஸ் (35), பவுன்ராஜ் (45) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சாத்தூா் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவா்களின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பவுன்ராஜ்

பவுன்ராஜ்

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான திருநெல்வேலி தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (29) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.