ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

லாரி மோதியதில் 3 பக்தா்கள் உயிரிழப்பு

சாத்தூா் அருகே லாரி மோதியதில் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள் மூவா் உயிரிழந்தனா்.

News image
முருகன்
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:12 pm

Din

சாத்தூா் அருகே லாரி மோதியதில் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள் மூவா் உயிரிழந்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூா் பகுதியைச் சோ்ந்த 50 போ் விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றனா்.

சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் என்.வெங்கடேஸ்வரபுரம் சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு இவா்கள் சென்று கொண்டிருந்தனா். அப்போது, திருநெல்வேலியிலிருந்து-மதுரை நோக்கிச் சென்ற லாரி மோதியதில் பாத யாத்திரை சென்ற முருகன் (45), மகேஸ் (35), பவுன்ராஜ் (45) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சாத்தூா் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவா்களின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பவுன்ராஜ்

பவுன்ராஜ்

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான திருநெல்வேலி தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (29) கைது செய்தனா்.