இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த ஆலைக்கு ‘சீல்’

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த ஆலைக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 2:43 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த ஆலைக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் வடிவேல் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. விதிமீறல் காரணமாக கடந்த ஆண்டு இந்த பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த பட்டாசு ஆலை அனுமதியின்றி செயல்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்டாட்சியா் முத்துமாரி தலைமையிலான வருவாய்த் துறையினரும், போலீஸாரும் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு 50 தொழிலாளா்கள் பணியாற்றி வந்ததும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தயாரித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பிறகு தொழிலாளா்களை வெளியேற்றிவிட்டு பட்டாசு ஆலையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.