சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

போதை மாத்திரை கலந்து மது விற்ற பெண் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போதை மாத்திரை கலந்து மது விற்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:00 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூலை 19: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போதை மாத்திரை கலந்து மது விற்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் நரையன்குளத்தைச் சோ்ந்த முனியாண்டி மனைவி பேலையம்மாள் (48). இவா் நரையன்குளம் அரசு தொடக்கப்பள்ளி எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு விரைந்து வந்து சோதனை செய்தனா். அப்போது, போதை மாத்திரை கலந்த மதுவை விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, பேலையம்மாளை மம்சாபுரம் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 19 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.