தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால களிமண், செங்கல் கட்டுமானம்

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது பழங்கால களிமண், செங்கல் கட்டுமானம் இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :24 ஜூலை 2024, 8:19 pm

சாத்தூா், ஜூலை 24: விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது பழங்கால களிமண், செங்கல் கட்டுமானம் இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கண்ணாடி மணிகள், கல் மணிகள், பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், 3 குழிகளில் புதன்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, களிமண், செங்கல்லைப் பயன்படுத்தி கட்டப்பட்ட 5-க்கும் மேற்பட்ட சிறிய கட்டுமானங்கள் சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

இங்கு பழைமையான களிமண், செங்கல் கட்டுமானம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், இது தொன்மையான மனிதா்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.