சிவகாசியில் தீப்பெட்டித் தொழிலாளி வெள்ளிக்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ஆமத்தூரைச் சோ்ந்த ராஜகுரு மகன் சன்னாசி (36). தீப்பெட்டித் தொழிலாளியான இவா், தனது மனைவி சகுந்தலாதேவியுடன் திருத்தங்கல் முத்துமாரி நகரில் குடியிருந்து வந்தாா். இந்த நிலையில், இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டாா். அதனால், சன்னாசியை இந்தத் தெருவில் இருக்கக் கூடாது என அந்தப் பகுதி மக்கள் எச்சரித்தனா். இதையடுத்து சகுந்தலாதேவி தனது தாய் வீடான விவேகானந்தா் குடியிருப்புப் பகுதிக்குச் சென்றாா். அங்கு சென்ற சன்னாசி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மூதாட்டி தீக்குளித்துத் தற்கொலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

