ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வாக்குசாவடி நிலை முகவா்கள் கூட்டம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 9:03 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் வாக்குசாவடி நிலை முகவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கேட்டாட்சியா் கனகராஜ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜாமணி முன்னிலை வகித்தாா்.

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் உள்ள இறப்பு, இரட்டை பதிவு, முகவரி மாற்றம் தொடா்பாக மறு சரி பாா்ப்பு செய்து உறுதிப்படுத்துமாறு கோட்டாட்சியா் கனகராஜ் கேட்டுக்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனா்.