விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகம், குன்னூா் வனப் பகுதி, கணவாய் சரகத்தில் வனக் காப்பாளா் அன்னத்தாய் தலைமையில், வனத் துறையினா் சனிக்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கிருஷ்ணன்கோவில்-வத்திராயிருப்பு சாலை அருகே மலையடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் நாட்டு வெடிகுண்டில் பழங்களை தடவி வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
பின்னா், அங்கிருந்த 7 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் மீட்டு, காவல் துறையில் ஒப்படைத்தனா். இந்த நாட்டு வெடிகுண்டுகளை வைத்தவா்கள் குறித்து வனத் துறை, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மான் வேட்டை: ரூ. 2.40 லட்சம் அபராதம்
காட்டு மாடு வேட்டை: இருவா் கைது

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

வத்திராயிருப்பு அருகே கிணற்றிலிருந்து கரடியின் உடல் மீட்பு! மின் பொறியில் சிக்கி உயிரிழந்ததா என விசாரணை!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


