அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
Published on

சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள உப்பத்தூா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டக் கிணற்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக சாத்தூா் தாலுகா போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா், தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கிணற்றில் மிதந்த பெண் உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து, கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அளித்த புகாரின்பேரில், தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து உயிரிழந்த பெண் குறித்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com